Sunday, March 29, 2009
அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு
கிராமம்....அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...
"காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்.."
ஆனால் பொலிஸ் வந்து தேடுகின்ற போது
அதைக் கண்டு பிடிக்க முடியாது...காட்டுக்குள் ஓடி விடும்..
இக்கதை தொடர்ந்து கொண்டே இருந்தது ....
உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...
அமெரிக்காவின் முப்படைகளும் அக் காடுகளுக்குச் சென்று
வேட்டை நடத்தியும் முடியவில்லை...
வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டது ...
பிரித்தானியா.. கனடா....பிரான்ஸ் இன்னும் பல..... ஒன்றும் செய்ய முடியவில்லை
புலியின் அட்டகாசமும் குறையவில்லை
கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும்
மகாநாடு ஒன்றும் நடத்தப்பட்டது
அதிலே அவமானம், எந்த
நாட்டாலும் முடியவில்லை என
பேசப்பட்ட போது!!!!!!!!....
எங்களைக் கேட்கலயே????????
....... ஒரு குரல் .....
பார்த்தால் "இலங்கை ஜனாதிபதி".....
"நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ...
இதப் பிடிக்க மாட்டமா."..எகத்தாளமாக...
சரி, அனுமதி அளிக்கப்பட்டது....
இலங்கை முப்படைகளும் அமெரிக்கா காட்டுக்குள் போயின ...
நாள்கள் மாதங்களாயிற்று...மாதங்கள் வருடங்களாயிற்று..
போன இலங்கைப்படை திரும்பவேயில்லை...
கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து...
இலங்கைப் படைகளை மீட்க அக்காட்டுக்குள் சென்றன..
அங்கு காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு
படைகள் அத் திசை நோக்கி விரைந்தன...
அங்கே அவர்கள் கண்ட காட்சி.............
""ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித்
தொங்க விடப் பட்டிருந்தது""
கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால்
தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர்
"ஒத்துக் கொள்ளு ... நீதான்
புலி.. ஒத்துக் கொள்ளு"
உடனே அங்கு சென்ற உலகப் படையினர்
அந்த அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்
"ஒரு வருடாமாக உன்னிடம் இதையா
கேட்டு வதைத்தனர்??????"
அதற்கு அப் பன்றி
"பரவாயில்லிங்க... எனக்கு ஒரு
வருசமாதான்... ஆனா இலங்கை
தமிழங்களுக்கு 25 வருடமா இதைத்தான்
பண்றாங்க"
என்றது
சிரித்தவாறு..............
கவிதை ஆக்கம்
இரா.உ. துஸ்யந்தன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment