Saturday, April 4, 2009

தமிழனுக்கு அச்சமில்லை என்றும் ! நீ புரிந்து கொள்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை
பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
எம் தலைவன் பிராபகரன் இருக்குமட்டும் அச்சமில்லை நாளை எம் தமிழ் ஈழம் மலர்வது உறுதி இதை நீ நம்பு...!
மலேசியாவில் இருந்து நான்


கவிதை ஆக்கம்
இரா.உ. துஸ்யந்தன்

No comments:

Post a Comment